ருடால்ஃப் எர்னஸ்ட் (Rudolf Ernst )வியன்னாவில் பிறந்தவர் (1854). தமது 15ஆவது வயதில் பைன் ஆர்ட்ஸ் அகடாமியில் சேர்ந்தார். இத்தாலிய இயற்கை காட்சி ஓவியங்களை கற்றுக்கொள்ளவும், கலையழகு காதல் ஓவியங்களையும் 1885 ஆம் ஆண்டு தொடக்கம் வரைய ஆரம்பித்தார்.
அவரது ஓவியங்களில் குழந்தைகள் மற்றும் உருவ ஓவியங்கள் தனித்தன்மை வாய்ந்தது. (அதாவது அச்சு அசல் என்று சொல்வோமே அப்படி ஒரு தன்மை மிக்கது).
1885 முதல் மத்திய கிழக்கு மற்றும் மொராக்கோ,ஸ்பெயின், துருக்கி (கீழ்திசை நாடுகள்) இங்கெல்லாம் பயணம் செய்தார். பலப்பல பாராட்டுகள் புகழ் அவரைத்தேடி வந்தாலும் தம் இறுதிகாலங்களை தனிமையில் கழித்தார். பாரிஸில் பாண்டே-அக்ஸ்-ரோஸஸ் (Fontenay-aux-Roses )என்ற இடத்தில் 1932 ல் மரணம் அடைந்தார்.
இவர் பயணக்காட்சிகள் நம் கண்முன்னே...அவை நம்முள் பல வித துடிப்புகளை எற்படுத்துவதை உணருங்கள்.
”விற்பனையாளருடன் பேரம் நடக்கிறது”
”கொல்லன் பட்டறை”
”புலியின் வருகைக்காக...”
”ஓவியத்தை ரசிக்கும் மங்கையர்(ஆஸ்திரியா)”
”சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அரேபியப் பெண்கள்”
”புலி வேட்டை”
”பூ காரிகை”
(மேலே உள்ள ஓவியத்தின் லைட்டிங் எபெக்ட் மற்றும் தரை சுவர்,பின்புலம்.. அஹா.. அற்புதம் !)
”நுழை வாயில்”
”ஓவியன்”











இனிய ஓவியா ன்னதும் நடிகை ஓவியாவை பத்தி எதோ எழுதியிருகீங்கன்னு ஓடி வந்தேன்.. ஹி ஹி.. படங்கள் அருமை
ReplyDeleteஅந்த தூரிகை செய்த தவம் அவரிடம் பயன்பட்டு இருக்கிறது .அற்புதமான பதிவு .
ReplyDeleteஅத்தனையும் பழமை ஆனாலும் அருமை
ReplyDelete