Showing posts with label ஒவியங்கள். Show all posts
Showing posts with label ஒவியங்கள். Show all posts

Tuesday, July 29, 2014

இந்திய ஓவியர்களின் ஓவியங்கள்

இந்த பதிவில் நான் ரசித்த இந்தியர்களின் ஓவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ரசனையோடு இருக்கின்றன. நவீன ஓவிய கைவண்ணம் இந்த ஓவியங்களில் புதினமாக மிளிர்கிறது.






மேல் ஓவியங்கள் :  திலிப் செளத்ரி


ஓவியம்  : புவா ஷெதே





ஓவியம் : அமோல் பவார்

ஓவியம் : தினகர் ஜாதவ்



ஓவியம் : கணேஷ் பான்டா


ஓவியம் :கோபால் செளத்ரி

ஓவியம் : ஜெகநாத் பால்



ஓவியம் : ஜிபான் பிஸ்வாஷ்

Saturday, June 28, 2014

ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ்

ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ் 1957 ல் பிறந்தவர். ரஷ்யன் ஓவியர்களின் கூட்டமைப்பில்  இவர் ஒரு உறுப்பினர்.

1996 முதல் இவரது ஓவியங்கள் கண்காட்சியில்  வைத்து வருகிறார்.

இவரது ஓவியங்கள் உலக அளவில் (ரஷ்யா பிரான்ஸ், பிரிட்டன், யுனைட்டேட் ஸ்டேட்ஸ்) பல்வேறு ஓவிய கண்காட்சிகளில் காட்சிப் படுத்தப்பட்டு விற்பனையாகி உள்ளன.



































Tuesday, February 4, 2014

மா கலைஞன் மைகேலேஞ்சலோ


மறுமலர்ச்சி காலத்தின் மிகச்சிறந்த கலைஞர் மைகேலேஞ்சலோ (Michelangelo
Buonarroti). சிற்பக்கலை, ஓவியர், கட்டிடக் கலை நிபுநர், கவிஞர், இப்படி பல பரிமாணங்கள் கொண்ட சகலகலா வல்லவராக திகழ்ந்தார்.   இவரைப் போல எந்த ஓவிய கலைஞனும் நிர்வாண ஓவியங்களை தத்ரூபமாக (perfection) வரைந்ததில்லை எனச் சொல்லுவார்கள்.


அரீஜோ வில் (டஸ்கெனி ,உயர் குடியில் பிறந்தவர்.  டொமினிகோ கிர்லேண்டையோ (Domenico  Ghirlandaio ) எனும் ஓவியரிடம் தற்காலிக பணியாளராக சேர்ந்து கற்றுகொண்டார்.  பின் லோரென் ஜோ டி மெடிசி,இவரிடன் ஓவிய கலை நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார். ஆசானின் மறைவுக்குப் பின் ரோமுக்கு பயணமானார்.




















அங்குதான் "sorrowful Pietà," எனும் மார்பிள் சிற்பங்களைப் படைத்தார். இந்த சிற்பம் கன்னி மரியாள் இறப்புக்குப் பின் யேசுவை மடியில் கிடத்தி இருப்பது போன்ற சிற்பம்.  "டேவி" நிர்வாண சிலை மாஸ்டர் பீஸ், இது ப்ளோரன்ஸ் தேசத்தில் உள்ளது (1504).

அதற்கு அடுத்த வருடத்தில் போப் இரண்டாம் ஜூலியஸ் இவருக்கு பாபல் (papal tomb) தேவாலயத்தில் பெரிய சிற்ப வேலையை கொடுத்தார் ஆனால் அது முழுமை அடைய வில்லை என்று சொல்லுகிறார்கள். இதற்கிடையில் சிஸ்டைன் சாபல் கூறை ஓவியங்களை வரைகிறார். தயக்கம் காட்டிய அவரை ஜூலியஸ் தான் அந்த பணியை முடிக்க வேண்டும் என அன்பு கட்டளை இடுகிறார்.  அப்போது அவருக்கு வயது 37 .  இதை பற்றி ஒன்று கேள்விப்பட்டது ஜீலியஸிடம் வரைய ஒப்புக்கொண்ட மைகேலேஞ்சலோ தான் சொல்லும் வரை யாரும் அதில் நுழைந்து ஓவியங்களை பார்க்க கூடாது என்று கராராக சொல்லி வேலையை துவங்குகிறார்.

ஆறுமாதமாகியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற பேராவல் ஏற்படுகிறது ஜூலியஸிற்கு, அவர் இல்லை என நினைத்து உள்ளே செல்ல எதிர்பாராமல் இதை மைகேலேஞ்சலோ பார்த்துவிட்டு கோபத்துடன் கூரையில் வரைந்த ஓவியங்களின் மேல் பெயின்டை ஊற்றி விட்டார். பின் நீண்ட சமாதானத்தின் பின் அந்த அருமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை திரும்ப படைத்தார்.

"தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட் " கட்டிடக் கூறையின் மேல் அமைத்த இன்னொரு ஓவியம் போப் மூன்றாம் பாலின் வேண்டுதலுக்கு வரைந்து கொடுத்தார்.  கட்டிட மேற்கூரையில் ஓவியம் வரைவது என்பது எத்தகைய கடினமான பணி. நான்கு ஆண்டுகளிலே 300 கும் மேற்பட்ட ஓவியங்களை தீட்டினார்.
1546 ல் ரோமில் உள்ள செயின் பீட்டர் கதீட்ரல் இவரின் கட்டிடக் கலை சிறப்பிற்கு சான்று பகர்கிறது.

இறுதி காலங்களில் இவர் கட்டிடக் கலையில் அதிகம் ஈடுபட்டார்.  ரோமில் இவர் மறைந்தார்.

மைகேலேஞ்சலோ
Michelangelo [1475 - 1564]

Saturday, December 28, 2013

கனவு ஓவியர் டான் வோய்னா

ரூமேனியாவை சேர்ந்த ஓவியர்  டான் வோய்னா  DAN VOINEA
இவர் வரையும் ஓவியங்கள் madness and fantasy  என்ற வடிவங்களின் கீழ் வருகிறது.  கனவுலகில் சஞ்சரிகாதவர்கள் யாருமில்லை என சொல்லலாம். ஏதேனும் ஒரு சந்தர்பங்களில் நாம் அந்த உலகிற்குள் செல்கிறோம்.  இதை தனது ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். தற்போது இவர் பெர்லினில் வசித்து வருகிறார் (Berlin, Germany)

DAN VOINEA (b. 1970, Brasov, Romania)


                                                      (Oil on linen )



                                     "உன் நினைவுகளை சுமந்து நான் எப்போதும்...."


                               "அவளின் அன்பின் பின்னே நான் எப்போதும்.."

"உன் நினைவுகளில் என் முகமே எனக்கு மறந்து போய்விட்டது"

                                                      கனவுகளில் என் தேடல்...

என் நினைவுகளை சிதறடித்து 
வலைவீசி காத்திருக்கிறேன்...
அவனுக்காக ... 











"ஓவியர் "

Popular Posts