Saturday, August 17, 2013

மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ


Octavio Ocampo

அக்டோவியோ ஓகம்போ,  ஷெலயா { குவானவாடோ (மெக்ஸிகோ)[ Celaya, Guanajuato ]  } என்ற ஊரில் பிறந்தவர் (1943).

இவர் மெக்ஸிகோ  நுண்கலை கல்வி நிறுவனத்திலும் பின் சான்ப்ரான்ஸிஸ்கோ கலை கல்லூரியிலும் பயின்றவர். 1972 முதல் இவரின் ஓவியங்களை காட்சிப் படுத்தி வருகிறார்.

ஏராளமான மெக்ஸிகன் மற்றும் அமெரிக்க படங்களுக்கு பின்புல இயற்கை காட்சிகளை யும், அதே போல பல நாடகங்களுக்கும் டிசைன்களை வரைந்து கொடுத்து இருக்கிறார்.

இவர் ஒரு நடிகராகவும், நடனம் ஆடுபவராகவும் அறியப்படுகிறார், 1976க்கு பின் முழுக்க முழுக்க தமது கவனத்தை ஓவியத்திலும், சிற்பக்கலையிலும் செலுத்தினார்.

இவர் பாணியில் வரைந்திருந்த  அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் உருவ ஓவியத்தை  மெக்ஸிகோ அரசாங்கத்தின் சார்பாக அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

இவரது ஓவியங்கள் மெட்டாமோர்பிக் (உருமாற்றம் சார்ந்த வகை) என வகைப்படுத்தப் படுகிறது.  இந்த வகையில் வரையப்பட்ட ஓவியத்தின் முதல் பார்வையில் ஒரு ஓவியமாகவும் கூர்ந்து கவனிக்கும் போது அது பல்வகை உருவங்கள்,படங்களை,பிரதிபிம்பங்களை ஒருங்கிணைத்து வரையப்பட்டது என புலப்படும்.

மொத்ததில் ஒரு ஓவியம் என்பது பல ஓவியங்கள் அசைவுகள் இணைந்த தொகுப்பாக இருக்கும்.

He works primarily in the metamorphic style - using a technique of superimposing and juxtaposing realistic and figurative details within the images that he creates.



இந்த ஓவியத்தில் ஒரு மனிதன் தெரிகிறான் உற்று பார்க்கும் போது, இந்த உருவத்தில் காடுகள், மலைப்பாதை, பாதையில் போகும் கார்கள், குப்புறப்படுத்து ரசிக்கும் மனிதன்,  நிலங்கள் தெரிகின்றது.





ஜிம்மிகார்டர் ஓவியம் அமெரிக்க கட்டிடங்கள், தொழிற்சாலைகள், கப்பல்கள், வாகனங்கள்,மலைகளின் தொகுப்பு


பூச்சாடி பூ ஒரு அழகிய பெண்ணாக


இந்த வீரர் ஓவியத்தில் பல உருவங்களை பார்க்கலாம் இரண்டு குதிரை வீரர்கள், கேடயம், வாள் மற்றும் உறை, குதிரைகள்,வானத்தை பார்க்கும் ஒரு பெண்முகம் ஒரு வீடாக, இருகைகளில் வாளியை ஏந்தி நிற்கும் பெண், முகமூடி அணிந்த வீரன், விண்ணில் பறக்கும் பெண் உருவம், மனித மண்டை ஓடு, காற்றாலை,தடி ஊன்றி செல்லும் மனிதர்கள்.. இன்னும்...


மக்களும் ரோஜா மலர்களும்,கோட்டையும்....மாதாவாக


நாற்காலி, பூணை, கேரட்டுகளின் மேல் படுத்துறங்கும் முயல், மனிதமுகங்கள்,மலைகள் இவை எல்லாம் இணைந்து மோனாலிஸா ( ஒரிஜினல் ஓவியத்தை பார்த்தால் இன்னும் பல தென்படலாம் ! )


கொடி,மலர், வண்ணத்துப்பூச்சி ஒரு அழகிய பெண்ணாக (கவிதையே தேவையில்லை !)



கடல் = காதலர்கள், இரு கைகளை தூக்கி ஒய்யாரமாக பாடிச் செல்லும் பெண் இலை உதிர்ந்த மரமாக, வானத்தில் காதலர்கள்,  வேர்களில் முகங்கள்,


சங்குகள், கடற்கன்னி, கடற்கன்னியின் தந்தை, மீன்கள் = நிர்வாண உருவங்கள், மரம்


குதிரைகளும், பறவைகளும் அழகி உருவமாய்...


ஒரு முகம்,  பல கதைகள்  ( புத்தர், இந்தியாவை நினைவுபடுத்துகிறது)





Tuesday, July 16, 2013

மிகப் பழமையான குகை ஓவியம் - அவதாரில்


மேலே காணும் இந்த குகை ஓவியத்தில் பலவகை காட்டு விலங்குகளின் கூட்டம் உயிரோட்டமாக தென்படுகிறது. 


நேர்த்தியான, இந்த ஓவியத்தில் என்னை கவர்ந்தது ஒரு குதிரை அதன் தலையில் இருந்து நீண்ட வால் போன்ற பகுதி இருக்கிறது.  இந்த விலங்கு காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம்.   எனக்கு இதே குதிரை உருவத்தை அவதார் ஆங்கிலப் படத்தில் கிராபிக்ஸில் கொண்டு கொண்டுவந்திருப்பது போல் தோன்றியது (உங்களுக்கு எப்படி தெரிகிறது ?)















இந்த குகை ஓவியத்தின் வரலாறு இதோ : 

நான்கு சிறுவர்கள் தாங்கள் வசித்த காட்டுப்பகுதியில் காலார நடந்து சென்ற போது கண்டறியப்பட்டது இந்த குகை ஓவியங்கள் (Lascauz cave ). 

இந்த குகை ஓவியங்கள் பிரான்ஸின் டார்டோனே (Dordogne) என்ற இடத்தில் அறியப்பட்ட ஆண்டு 1940. இந்த ஓவியங்கள் சூமார் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இரண்டாம் உலப்போர் சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளி உலகத்திற்கு எட்டு ஆண்டுகள் கழித்து தெரிந்தது.  1963 வரையிலும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்ததாம்.  வரலாற்றுக்கு முந்திய காலத்தின்(prehistoric) உலகின் சிறந்த ஓவியமாக இதை கருதுகிறார்கள்,ஃபிரான்ஸில்.


Monday, July 1, 2013

முப்பரிமாண ஓவியர் M.C. எஷர்


Maurits Cornelis Escher [1898 – 1972]

டச்சு எழுத்துரு ஓவியர் எம்.சி. எஷர் (மாரிட்ஸ் குர்ன்லிஸ் எஷர்) தனக்கென முத்திரை பதித்தவர். இவரது ஓவியங்களை  மீசோ டிண்ட், அச்சு கலை பாணி(லித்தோ), கணித வரைகலை, முப்பரிமாண வியூகம்,நிழலுறுக்கள்... என பல வகைப்பாட்டியலில் சேர்க்கிறார்கள். (மேலும் மர வேலைப்பாடும் அறிந்த ஜீனியஸ்) எனக்கு இவரது ஓவியங்களை பார்க்கையில் நம்மூர் (தமிழக) ஓவியர் ராமு அவர்களின் ஓவியங்கள் மனக்கண் முன் விரிந்தன.

ஃப்ரிஸ்லாந்தில் (Friesland) சிவில் இன்ஜினியரின் மகனாக பிறந்த தாலோ என்னவோ இவரக்கு முப்பரிமாண ஓவியங்கள் எளிதாக கைகூடியது.  இவர் கற்பனைப் பார்வையில் பட்ட ஒவ்வொன்றும் இவரின் தூரிகையில் முப்பரிமாணங்களாக உயிர் உருவம் பெற்றன.

அரசியல் ஈடுபாடு மிக்க இவர், 1937ல் பெல்ஜியதிற்கு குடிபெயர்ந்தார் அங்கிருந்து தொடங்குகிறது (லைப் அண்ட் ஸ்ட்ரீட் )இவரது ஓவிய உலகம்.  இரண்டாம் உலப்போர் இவரை நெதர்லாந்துக்கு தள்ளியது.

கருப்பு வெள்ளையில் வரைந்த ஓவியங்கள் அதன் பரிமாணம், வியூகம் நம்மை ஒரு புது உலகத்திற்கு அழைத்து செல்கிறது.  "தன்னை தானே வரைந்து கொள்ளும் கைகள் (drawing hands), வானமும் தண்ணீரும் (sky and water), ஏற்றமும் இறக்கமும் ( Ascending and Descending)
இன்னும் எண்ணற்ற ஓவியங்கள் நம் நெஞ்சத்தை அள்ளுகின்றன. இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று அவர் இடது கை பழக்கம் உள்ளவர்.

1958 ல் Regular Division of the Plane என்ற ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகம் கணிதம் சார்ந்த டிசைன்களையும், வரைகலை(DRAFTS) நுணுக்கங்களை, மர உருவக் கலைகளை விளக்கியது.

ஹாகுவே அருங்காட்சியகத்தில்(Hague Museum) இவரது ஓவியங்கள் காட்சிக்குள்ளன இன்னும்..,the National Gallery of Art (Washington, DC); the National Gallery of Canada (Ottawa); the Israel Museum (Jerusalem); Huis ten Bosch (Nagasaki, Japan); and the Boston Public Library

Drawing Hands, lithograph (1948)

House of Stairs, lithograph (1951)


















Wednesday, June 12, 2013

[findings] அலங்கார ஓவியர் அல்போன்ஸ் முக்‌ஷா

ஓவியர் அல்போன்ஸ் முக்‌ஷா
Alfons Maria Mucha [1860 -1939]

அல்போன்ஸ் மரிய முக்‌ஷா செக் குடியரசில் பிறந்தவர். இளம் வயதில் இருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.   அதுவும் ஓவியத்தில் அலங்கார வகை (Decorative art) இவருக்குப் பிடித்த ஒன்று.  விளம்பரக் கம்பெனிக்காக சாரா பெர்ன்ஹர்ட் எனும் நடிகையின் உருவ ஓவியங்களை வரைந்து கொடுத்தார்.   அழகுமிக்க அலங்கார வகை ஓவியங்களை புத்தக நிறுவனங்களுக்காகவும், காலண்டர், நகை,கார்பெட், தியேட்டர் செட்களுக்காகவும் இவரது கலை பயன்பட்டது.


 ”முக்‌ஷா ஸ்டைல்” என்றே இவரது ஓவியங்கள் புகழ் பெற்றது. பின்னாளில் இந்த வகை பிரெஞ்சில் “ஆர்ட் நூவு” (art Nouveau)எனும் ஒரு தனி வகை ஓவியமாக அழைக்கப்பட்டது. இதை தமிழில் ”புதிய கலை” எனச் சொல்லலாம்.

1900ல் பாரிஸில் நடைபெற்ற உலக ஓவிய கண்காட்சியில் உலக அளவில் பேசப்பட்டார்.

முதல் உலகப்போருக்குப்பின் செக்கோஸ்லோவோகியா சுதந்திரநாடாகப்பிரகனப்படுத்தப்பட்ட பின் அந்நாட்டு தபால்தலை, பணம், அரசாங்க பத்திர டிசைன்களில் இவரின் உழைப்பு இருந்தது.

1928 ப்ராகுவில் ”ஸ்லேவ் எபிக்” எனும் தலைப்பிளான 20 பெரிய ஓவியங்களை படைத்தார். இந்த ஓவியங்கள் செக் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றை பேசியது.

தனது 78வது வயதில் 14 July 1939 ல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை...
என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகிறது இந்த ஓவியங்கள்.

ஒவ்வொரு காலத்திற்கும் (Seasons) ஒவ்வொரு ஓவியம்

^ Autumn(1896)

^ Spring (1896)

^ Summer (1896)


^ Winter (1896)









^ Self  Portrait

Popular Posts